Posts

Showing posts from October, 2024

ஷைமா பயணப்பட்டு விட்டாள்...!!

Image
அதிகாலைச் செய்தியது அதிர்ச்சிக்குள்ளாக்கியது பெரும்பாலும் அதிகாலையில் வரும் தொலைபேசி அழைப்புக்கள் ஜனாஸா தகவல்களாகவே இருந்திருக்கின்றன.. இன்றைய தினமும் அப்படித்தான். சுமார் 4.30 மணியளவில் ஜனாஸா பற்றி அறியக் கிடைத்தது. அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியவில்லை. இதே போன்று ஒரு தினத்தில் தான், இதே குடும்பத்தில் பிறந்து , வளர்ந்த சஹ்லாவின் ஜனாஸா அறிவிப்புக் கிடைத்தது. அவள் வபாத்தாகி 4 வருடங்கள். இன்று அவள் தங்கையும் பயணப்படுகிறாள். சஹ்லாவை எனக்கு நன்கு பரீட்சயம்.. ஷைமா வை அவ்வளவாக பழக்கமில்லை.. சஹ்லா வின் வபாத்தின் பின் ஷைமா எங்கும் போக மாட்டாள்.. பாடசாலை , பள்ளிக்கூடம் என எல்லாவற்றையும் தவிர்த்து இருந்தாள். தாத்தா வின் நினைவுகளில் இருந்து அவளால் மீண்டு வர நீண்ட காலம் எடுத்தது. தாத்தாவுடன் பத்ரியாவுக்கு சென்றுகொண்டிருந்த ஷைமா , சஹ்லாவின் வபாத்தின் பின் நீண்ட கால இடைவெளியின் பின் அவளது மாற்றத்திற்காக பாலிகாவில் சேர்ந்து கல்வியை தொடரலானாள். இன்று அவளும் எல்லாவற்றையும் விட்டு பயணப்படுகிறாள். ஒற்றுமை என்னவெனில், இரு ஜனாஸாக்களும் .. இரவு சாப்பிட்டு உறங்கிய குழந்தைகள்.. நடுச்சாமத்தில் ச...