*எம்மை பண்படுத்த வரும் ரமழானை புண்படுத்தாது இருப்போம்*



                                                

      இறைவன் அருளிய இஸ்லாம் மார்க்கம் தந்த  கடமைகளில் நோன்பும் முக்கியமான ஒரு கடமை. அதனை ரமழான் மாதத்தில் இறைவன் கடமையாக்கியுள்ளான்.  வருடா வருடம் எம்மை  பண்படுத்துவதற்காக ரமலான் ஒரு மாத காலமாய் எம்மை அணைத்துக் கொள்கிறது. நாம்தான் அதனை பற்றி சரியாகப் புரியாமல் ஏனோ தானோ என ஏனைய மாதங்களைப் போல் ரமலான் மாதத்தையும் இலகுவாகக் கடந்து விடுகிறோம்.

 ஆனால் நாம் கற்க வேண்டிய நிறைய பாடங்களை ரமழான் எமக்கு கற்றுத் தருகிறது. மனிதனை புனிதனாக மாற்றும் பக்குவத்தை ரமழான் மட்டுமே வழங்குகிறது. ஒவ்வொரு கடமைகளையும் ஒவ்வொரு காலத்தில் இறைவன் எமக்காய் வைத்திருந்தாலும் அவற்றுக்கான முழுப்பயனையும் ரமழான் மாதத்தில் நாம் பெற்றுக்கொள்ள முடியும். ஐவேளைத் தொழுகையையும் நேரப்படி தொழ முடியும்.ஸகாத் , ஸதகா போன்றவற்றைக் கொடுத்து பிறருக்கு உதவ முடியும். குர்ஆனை ஓத முடியும். தஸ்பீஹ் ,  இஸ்திஃபார் போன்ற நல் அமல்களில் தினம்தினம் ஈடுபடுவதன் மூலம் ஏனைய காலங்களை விட சிறந்த நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும்... ஒரு நற்செயலுக்கான கூலி ஒன்றுக்கு மேற்பட்டதாக கிடைக்கும் போது அதனை பெற்றுக் கொள்வதில் நாம் ஏன் தாமதிக்க வேண்டும்..?  ரமழான் மாதம் எம்மை பண்படுத்த வருகிறது. அம்மாதத்தினை புண்படுத்தாமல் இருப்போம். 

பயாஸா பாஸில் 
கஹட்டோவிட்ட

Comments

Popular posts from this blog

என் எழுத்துக்கு ஒரு தசாப்தம் நூல் வெளியீட்டு விழாவும் நூல் விமர்சனமும் - லுதுபியா லுக்மான்

ஷைமா பயணப்பட்டு விட்டாள்...!!

சிறு களஞ்சியம் தான்