எனக்கான உதாரணமாய் மழையே நீ

போராடிப்போராடி 
தோற்றுப்போனாலும் 
போராட முன்பே 
வெற்றி விளைந்தாலும் 
கண் சிந்தும் துளிகளுக்கு 
விலைமதிப்பில்லை
என்றோ ஓர் நாள் 
பொழிய வேண்டியது... 
இருந்தாலும் இன்றாவது 
பொழிகிறதே... 
காத்திருப்பதும் 
சந்தோஷம் தான் 
காலம் கூடி வருகையில்... 
களிப்பூட்டுகையில்... 
ஒரு வித நிம்மதி 
மனதினுள்.... 
எனக்கான உதாரணமாய் 
மழையே நீ ....!! 

Fayasa fasil - writer

Comments

Popular posts from this blog

என் எழுத்துக்கு ஒரு தசாப்தம் நூல் வெளியீட்டு விழாவும் நூல் விமர்சனமும் - லுதுபியா லுக்மான்

ஷைமா பயணப்பட்டு விட்டாள்...!!

சிறு களஞ்சியம் தான்