தாலி ஒரு வேலி'
' திருமணம் ஒரு முடிச்சு'
என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறேன்.
என்னைப் பொறுத்த வரையில்
நான் பறக்க
எனக்கு கொடுக்கப்பட்ட சிறகு
- திருமணம் என்பேன்.
நீண்ட கால கனவு
நனவாவது சாத்தியமா..!?
என்றும்
யோசித்ததுண்டு....
சும்மாவா சொன்னார்கள்...
' கல்விக்கு கரையில '
திருமணம்...
பிள்ளைப்பேறு...
தொழில்...
கல்வி...
சேவை...
மாமனாரின் வபாத்...
என்றெல்லாம்
பல்கோண திரிபுகள்..
வாழ்க்கைப்பாடத்தில்
பல அனுபவங்கள்..
அனைத்தையும் கடந்து
என் இலட்சியத்தில்
நான் கொண்ட காதல்
முடிசூடக் காத்திருக்கிறது.
நான் படிக்க வேண்டும்
பட்டம் பெற வேண்டும்
என்று ஆசைப்பட்ட ஆன்மாக்களில்
என் மாமனாரும் (கணவரின் தந்தை)
முக்கியமானவர்
ஆனால்..,
இன்று அவர் இறைவனின் பக்கம்
வல்லவன் அல்லாஹ்
அவரது கப்ரை
விசாலமாக்கி..
வெளிச்சமாக்கி..
வைப்பானாக..!!
இந்த இடம் வரை
நான் பயணிக்க...
இறைவனின் அருளும்
என் தாயின் பிரார்த்தனைகளும் குடும்பத்தாரின் கூட்டு ஒத்துழைப்பும்
என் கணவரின் பேராதரவும் காரணம் என்பேன்.
இன்ஷா அல்லாஹ்...!
இன்னும் தொடரும்..!!
Fb: fayasafasil-writer
Comments
Post a Comment