சுவாரஷ்யமான அந்த நாட்களை இன்று நினைத்தாலும் பூரிப்படைகிறது மனது. உம்மாவுடன் நோயாளிகளை நலம் விசாரிக்க செல்வதும், உற்றார் உறவினர் வீடுகளை நோக்கி விருந்தினராய் செல்வதும், வழியில் காண்போருக்கெல்லாம் சலாம் கூறிய படி நலம் விசாரித்து நடந்து வருவதும், பெருநாள் என்றால் குதூகலமாய் திரிவதும் என அன்றைய நாட்கள் இன்பமயமானதாய் இருக்கும்.
ஆனால் இப்பொழுதெல்லாம் அவ்வாறல்ல.... நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலைப்பளு , இயந்திர வாழ்க்கை எல்லாவற்றையுமே மாற்றிவிட்டது. பழைய கால நிகழ்வுகள் கண்முன்னே நிழலாடுகின்றன. திரும்பிப் போக முடியாத தூரத்தில் நிற்கிறோம். எட்டிப் பிடிக்க முடியாமல் நாம் சென்ற வழிகள், எம் பிள்ளைகள் அறிய வாய்ப்பு இல்லாமலே சென்று விட்டுள்ளது பட்டம் விட்டு விளையாடிய தருணங்கள், பட்டாம்பூச்சி பிடித்து விளையாடிய நாட்கள், கூட்டாஞ்சோறு சமைத்த பொழுதுகள், துள்ளிப் பாய்ந்த டப்பா விளையாட்டுக்கள் என்று இன்னும் பல விடயங்கள் சுவாரஷ்யமானவை... இன்று எமது பிள்ளைகள்... நுகர முடியாத இயந்திர உலகில் நாமும் நுழைந்து எமது சந்ததிகளையும் திணித்துக் கொண்டிருக்கின்றோம். எப்போது மாறும்....?! என்ற கேள்வி எப்போதும் விடை இன்றி தான் இருக்கும்...!!
Pic : google
Fayasa fasil - writer
Comments
Post a Comment