பயாஸா பாஸில் எழுதிய "என் எழுத்துக்கு ஒரு தசாப்தம் " கவிதை நூலானது, பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி 2023 அன்று ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் வெளியீட்டில் (zoom) ஒன்லைன் ஊடாக மிகவும் சிறப்பான முறையில் இரவு 7.00 மணிக்கு நடைபெற்றது. சிஹானா நௌபர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க மூத்த கவிஞர் நஜ்முல் ஹுஸைன் அவர்கள் தலைமை உரையினை நிகழ்த்தினார். பியாஸ் முஹம்மட் அவர்கள் (former Editor Meelparvai , Editor Newsnow.lk )அழகான முறையில் நூலாசிரியரை அறிமுகம் செய்து வைக்க சிறப்பு அதிதியாக எம் .எம் .மொஹமட் (இலங்கை தேர்தல் ஆணைக் குழு உறுப்பினர் ) மற்றும் எம் .இஸட்.அஹமட் முனவ்வர்...
அதிகாலைச் செய்தியது அதிர்ச்சிக்குள்ளாக்கியது பெரும்பாலும் அதிகாலையில் வரும் தொலைபேசி அழைப்புக்கள் ஜனாஸா தகவல்களாகவே இருந்திருக்கின்றன.. இன்றைய தினமும் அப்படித்தான். சுமார் 4.30 மணியளவில் ஜனாஸா பற்றி அறியக் கிடைத்தது. அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியவில்லை. இதே போன்று ஒரு தினத்தில் தான், இதே குடும்பத்தில் பிறந்து , வளர்ந்த சஹ்லாவின் ஜனாஸா அறிவிப்புக் கிடைத்தது. அவள் வபாத்தாகி 4 வருடங்கள். இன்று அவள் தங்கையும் பயணப்படுகிறாள். சஹ்லாவை எனக்கு நன்கு பரீட்சயம்.. ஷைமா வை அவ்வளவாக பழக்கமில்லை.. சஹ்லா வின் வபாத்தின் பின் ஷைமா எங்கும் போக மாட்டாள்.. பாடசாலை , பள்ளிக்கூடம் என எல்லாவற்றையும் தவிர்த்து இருந்தாள். தாத்தா வின் நினைவுகளில் இருந்து அவளால் மீண்டு வர நீண்ட காலம் எடுத்தது. தாத்தாவுடன் பத்ரியாவுக்கு சென்றுகொண்டிருந்த ஷைமா , சஹ்லாவின் வபாத்தின் பின் நீண்ட கால இடைவெளியின் பின் அவளது மாற்றத்திற்காக பாலிகாவில் சேர்ந்து கல்வியை தொடரலானாள். இன்று அவளும் எல்லாவற்றையும் விட்டு பயணப்படுகிறாள். ஒற்றுமை என்னவெனில், இரு ஜனாஸாக்களும் .. இரவு சாப்பிட்டு உறங்கிய குழந்தைகள்.. நடுச்சாமத்தில் ச...
சிறு களஞ்சியம் தான். விரல் விட்டு எண்ணக் கூடிய சில புத்தகங்கள் தான் என் கையிருப்பில்… ஆனால்…, அரும் பெரும் புத்தகச் சேர்வைகள் கொண்ட பெரிய நூலகத்தின் சொந்தக்காரி நான் என் கனவுக் கோட்டையில்… இருக்க.., ஒரு திட்ட வேலைக்காய் எடுத்து வைத்த சிறு பனுவலைக் காணவில்லை. தொலைந்தது எப்படி..? எனக்கே தெரியவில்லை. கோபம் , சோர்வு , கவலை எல்லாம் ஒருங்கே அரங்கேற கொஞ்சம் பொறுமையாய் இருந்தேன். சிறிது நேரம் சென்று வேறொரு வேலைக்காய் pastels தேடிக்கொண்டிருக்கையில் வைத்த இடத்திலேயே என்னைப் பரிதாபமாய் பார்த்துக்கொண்டிருந்தது தொலைந்த இல்லை.. இல்லை.. நான் தொலைத்ததாக நினைத்த அந்தப்பனுவல்.. நெற்றியில் உள்ளங்கை வைத்து உட்கார்ந்து விட்டேன் சிறு புன்னகையுடன்… குறிப்பு : #மஹ்ஜபீன் நாவலையும் #கவலைப்படாதே புத்தகத்தையும் நீண்ட காலமாக தேடுகிறேன்.. கண்ணில் அகப்படவில்லை.. பெறக் கூடிய இடங்கள் தெரிந்தவர்கள் தயவாய் கீழே கமெண்ட் பண்ணவும்.. Fayasa Fasil - Writer
Comments
Post a Comment