பேச்சை அழகாக்குவோம்
#பேச்சை_அழகாக்குவோம்
மனிதனானவன் தனக்கு கிடைத்த பல அருட்கொடைகளை வைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கிறான்.
அதில் ஒன்று நாவு.
அந்த நாவை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது புரியாதவர்களாக நாம் வாழ்கிறோம்.
பேசிவிட்டால் போதும் என்று சிந்திப்போமே தவிர அந்தப் பேச்சு எவ்வாறானதாக அமைய வேண்டும் என்பதை நோக்கத் தவறுகிறோம்.
பேசும்போது...,
1. அளவாக பேச வேண்டும்.
2. அழகாக பேச வேண்டும்.
3. ஆட்களைப் பொறுத்தே பேச வேண்டும்.
ஒரு மனிதன் தனக்கு அவசியமற்ற விடயங்களில் தலையிடாமல் இருப்பதே சிறந்தது.
"..... இன்னும் மனிதர்களுக்கு அழகானதைச் சொல்லுங்கள்..."
( பகரா : 83 )
" கால் தவறி விழுவதை விட மனிதன் வாய் தவறி விழுவதே அதிகம் " ( பைஹகீ )
இதனால் தான் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டிய உறுப்பு நாவு என்றும் கூறப்படுகின்றது.
எனவே சிறந்த முறையில் எம் நாவுகளைப் பாதுகாத்துக் கொள்வோமாக...!!
Fayasa fasil - writer
#speaking #kindtalk #tounge
Comments
Post a Comment