சிறுகதை
*ஆமினா தாத்தா* உண்மையில் நாங்களாவது சிந்தித்து இருப்போமா, என்பது சந்தேகம் தான்.பல கேள்விகளுக்கு விடை தேடியவர், திருமணமாகி இரண்டு பெண் குழந்தை களை பெற்றெடுத்த ஆத்மா காலத்தின் கட்டளைக்காய் வெளிநாடு செல்ல நேர்ந்தது. ஒரிரண்டு வருடங்கள் தங்கி வீட்டு பணிப்பெண்ணாய் வேலை பார்க்கிறார். அங்கே சில மணி நேரங்களுக்கு ஒரு முறை ஏதோ ஒன்று கூவப்படுவது அவர் காதுகளுக்கு எட்டுகிறது. இது என்ன? ஏன் இவ்வாறு கூவப்படுகிறது? இதன் மூலம் என்ன நடைபெறுகிறது? யாருக்காக இது கூவப்படுகிறது? என்றெல்லாம் சிந்திக்கத் தலைப்பட்டு, தான் பணிப்பெண்ணாய் வேலை செய்யும் வீட்டில் உள்ளோரிடம் அது பற்றி கேள்விகளையும் சந்தேகங்களையும் கேட்டு தன்னை தெளிவு படுத்திக்கொள்கிறார். மாஷா அல்லாஹ்...! அறியாத மொழியை அறிந்து, தெரியாத விடயங்கள் தெரிந்து கொள்கிறார். வீட்டிற்கு அழைப்பு செய்கிறார். "அஸ்ஸலாமு அலைக்கும்,நான் ஆமினா கதைக்கிறேன்.எல்லோரும் சுகமா? நான் நலம். அல்ஹம்துலில்லாஹ் நான் இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்து கொண்டேன்".கணவன் அதிர்ச்சியில் ஒரு நிமிடம் உறைய.. "கூடிய விரைவில் நான் வந்து உங்களையும் நான் பெற்றெடுத்த பிள்ளைகளையும் எனது மார்க்க்த்திற்கு அழைத்துக்கொள்வேன்". என்று கூறி அழைப்பை துண்டித்தார். ஒவ்வொரு நாளும் இஸ்லாம் பற்றிய புதிய புதிய விடயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினார். வீட்டவர்களும் தம்மால் முடிந்தளவு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தார்கள். பணத்தாலும் பொருளாலும் ஆமினாவுக்கு உதவி செய்தனர். ஆமினா நாடு திரும்பும் காலம் வரவே... ஆனந்தமாய் தன் வீட்டை அடைகிறாள். அவளுக்கு எதிர்பார்த்த விடயங்கள் தான் நடந்தேறின. கணவன் முகத்தை கூட பார்க்காமல் விரட்டியடித்தான்.ஓரளவு வயது வந்தவர்கள் என்றபடியால், பிள்ளைகளை இஸ்லாத்தின் பால் அழைத்தாள். யாரும் வரவில்லை. தனக்கு ஏற்கனவே அறிமுகமாயிருந்த முஸ்லிம் குடும்பத்தினரின் உதவியுடன் தனக்கான ஒரு நிலம் வாங்கி, அழகான வீட்டையும் கட்டினார். மனைவி மரணித்த நிலையில் இருக்கக்கூடிய ஒருவருக்கு விருப்பப்படி நிகாஹ் மூலம் மனைவியானார். தன்னுடைய முந்திய கணவன் மரணித்தமைக்காக மனம் வருந்தினார். தன் பிள்ளைகள் கூட திருமணம் செய்து நன்றாகவே வாழ்கிறார்கள் என அறிந்து கொண்டார். பிள்ளைகளும் ஆமினாவைக்காண அடிக்கடி வந்து போவர். புனித யாத்திரையாம் ஹஜ்ஜைக்கூட கணவனுடன் இணைந்து அழகிய முறையில் செய்து வந்த்தார். அவரைக்காணவே உள்ளம் பூரிப்படையும். மாஷா அல்லாஹ்.. அவர் இதற்கு முன் எந்த மதத்தில் இருந்தார் என்பது முக்கியமில்லை. இப்போதும் அவர் ஆமினா தாத்தா தான்.
*பயாஸா பாஸில்* - கஹட்டோவிட
Comments
Post a Comment