Posts

Showing posts from March, 2023

உதிர்ந்த பூவாய் இன்று நிஸ்பா தாத்தா

Image
எமது ஊரின் மேற்குப் பக்கத்தில் (கொச்சிவத்தை) வாழ்ந்து வந்தவர். அவரைப் பற்றி விசாலமாய்  எழுதுவதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. என்றாலும்...,   ஏதோ எழுதிவிட வேண்டுமென்றே என் மனம் உந்துகிறது.  அவருடன் சேர்ந்து ஒன்பது சகோதரர்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஊரில் தான் இருக்கிறார்கள்.  'சுகமில்லை' என கேள்விப்பட்டு ஓரிரு வாரங்களே.., நோயால் கஷ்டப்படாமல் அவரை அன்பானவன் அழைத்துக் கொண்டுவிட்டான்.  கணவனுக்கு சுகமில்லை என்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால் தன்னாலான முயற்சிகளை செய்து கணவனை காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வந்தவர்..  இன்று மீளாத் துயிலில்... கணவனின் மனது கனத்துப்போகாதா....?!  இறைவா...  நிஸ்பா தாத்தாவின் கணவனுக்கும் , சகோதரர்களுக்கும் , உற்றார் உறவினர்களுக்கும் பொறுமையை வழங்கி வைப்பாயாக...!!  நிஸ்பா தாத்தாவுக்கு ஜன்னதுல் பிர்தவ்ஸை பாக்கியமாக்கி வைப்பாயாக....!!  எமது ஊரில்  இந்த முறை ரமழானின் இது முதல் மையித். இன்றைய தினம் இறைவனடி சேர்ந்துவிட்ட அவரை எமது துஆக்களில் சேர்த்துக் கொள்வோம். அல்லாஹும்மஃபிர்லஹா...  வர்ஹம்...

பூஞ்சிட்டே முபஷ்ஷிரா....!

Image
பூஞ்சிட்டே முபஷ்ஷிரா.... என் பேனா முனையின் இன்றைய பேசு பொருள் நீ   கஹட்டோவிட்ட  பூமி ஈன்றெடுத்த பூஞ்சிட்டு நீ  பூவாகி காயாகி  கிளை பரப்பும் நிழல் மரமாய் மாறுவதற்கு முன்  பூஞ்சிட்டாகவே நீ  திரும்பிச் செல்வது தான் தாங்கொணா துயர் தருகிறது  உனக்கான காலம் எழுதப்பட்டது தானே  எனக்கும் தான்  முன்னே செல்கிறாய் நீ பின்னாளில்  நாங்களும் வருவோம் பாதையில் எங்கு கண்டாலும் சிரித்து பேசி சலாம் சொல்லும் உன் பூ முகம் என்றும் என் மனக்கண்களில் புத்தகம் அடக்கிய கைகளுடன் என் பதின்ம  வயதில்  கல்வி கற்றுக்கொள்ள  என்னிடம் வந்தாய் நீ  பூஞ்சிட்டாகவே நடை உடை பாவனை அத்தனையும் அம்சமாய் அமைந்திருந்த உன்னை விரும்பாமல் இருப்பார்களா..?  மெல்லிய உடல்வாகு  பேச்சிலும் மென்மை  சிரிக்கும் பூமகம்  கண்களில் பரவசம்  பூஞ்சிட்டே முபஷ்ஷிரா   நீ பயணப்பட்டு விட்டாய்  மனது கணக்கிறது அன்பே வெறும் 21 தான் வயது எங்களைப் புறந்தள்ளி வல்லவன் உன்னை அழைத்துக் கொண்டான்  எல்லாம் நன்மைக்கே  விழி நிறைய வலி மட்டும் தான் உனக...
Image
சுவாரஷ்யமான அந்த நாட்களை  இன்று நினைத்தாலும் பூரிப்படைகிறது மனது.  உம்மாவுடன் நோயாளிகளை நலம் விசாரிக்க செல்வதும்,  உற்றார் உறவினர் வீடுகளை நோக்கி விருந்தினராய் செல்வதும், வழியில் காண்போருக்கெல்லாம் சலாம் கூறிய படி நலம் விசாரித்து நடந்து வருவதும்,  பெருநாள் என்றால் குதூகலமாய் திரிவதும் என அன்றைய நாட்கள் இன்பமயமானதாய் இருக்கும்.   ஆனால் இப்பொழுதெல்லாம் அவ்வாறல்ல.... நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலைப்பளு ,  இயந்திர வாழ்க்கை எல்லாவற்றையுமே மாற்றிவிட்டது.  பழைய கால நிகழ்வுகள் கண்முன்னே நிழலாடுகின்றன. திரும்பிப் போக முடியாத தூரத்தில் நிற்கிறோம். எட்டிப் பிடிக்க முடியாமல் நாம் சென்ற வழிகள்,  எம் பிள்ளைகள் அறிய வாய்ப்பு இல்லாமலே சென்று விட்டுள்ளது பட்டம் விட்டு விளையாடிய தருணங்கள், பட்டாம்பூச்சி பிடித்து விளையாடிய நாட்கள், கூட்டாஞ்சோறு சமைத்த பொழுதுகள், துள்ளிப் பாய்ந்த டப்பா விளையாட்டுக்கள் என்று இன்னும் பல விடயங்கள் சுவாரஷ்யமானவை...  இன்று எமது பிள்ளைகள்...  நுகர முடியாத இயந்திர உலகில் நாமும் நுழைந்து எமது சந்ததிகளையும் திணித்துக் கொண்...
Image
தேடல் மிகுந்த  கண்களுக்கும் கலைஞர்களுக்கும் பெருவிருந்தாக அமைந்திருக்கிறது  ரசித்து ருசிக்க வேண்டிய  இன்ப விருந்து  புதுகை சிக்கந்தரின்  நூலோடு ஆரம்பித்து  சிகிரியா வரலாறு கூறி  செயலமர்வுகளை செம்மைப்படுத்தி  வாசிப்பை ஊக்கப்படுத்தி கவிதைகள்  மற்றும் சிறுகதைகளால் அலங்காரம் செய்து  நூற்றாண்டு விழா காணும் பாடசாலையை அறிமுகப்படுத்தி ஸ்கை தமிழ் பெற்ற கௌரவம் உரைத்து  தொழுகையை பறைசாற்றி இலங்கை தாயிடம் மன்னிப்பு ஏந்தி  வினோத மனிதர்களை தெரியப்படுத்தி  திரை விமர்சனங்களையும் ஏந்தியபடி வந்துள்ளது ஆளுமைகளை அறிமுகமாக்கி என் எழுத்துக்கள் அடங்கிய தசாப்த நூலின் விமர்சனத்தை விசாலப்படுத்தி  போதை பற்றிய விழிப்புணர்வூட்டி பாடசாலைகளின் வரலாறு விரித்து   நேரம் முகாமைத்துவம் போன்ற அனைத்தினதும்   பெரிதான விளக்கங்கள் தாராளமாய்  துணிந்தெழு சுமந்து வந்திருக்கின்றது...  Fayasafasil - writer 

என் எழுத்துக்கு ஒரு தசாப்தம் நூல் வெளியீட்டு விழாவும் நூல் விமர்சனமும் - லுதுபியா லுக்மான்

Image
பயாஸா  பாஸில்  எழுதிய  "என்  எழுத்துக்கு  ஒரு  தசாப்தம் "   கவிதை  நூலானது,    பெப்ரவரி   மாதம்  இரண்டாம்  திகதி  2023  அன்று  ஸ்கை தமிழ்  ஊடக  வலையமைப்பின்  வெளியீட்டில்  (zoom)  ஒன்லைன்  ஊடாக  மிகவும்  சிறப்பான  முறையில்  இரவு  7.00 மணிக்கு  நடைபெற்றது.             சிஹானா நௌபர்  நிகழ்ச்சிகளை  தொகுத்து  வழங்க    மூத்த  கவிஞர்  நஜ்முல்  ஹுஸைன்   அவர்கள் தலைமை  உரையினை  நிகழ்த்தினார்.   பியாஸ்  முஹம்மட்  அவர்கள் (former  Editor Meelparvai , Editor Newsnow.lk  )அழகான  முறையில்  நூலாசிரியரை  அறிமுகம்  செய்து  வைக்க   சிறப்பு  அதிதியாக  எம் .எம் .மொஹமட்  (இலங்கை  தேர்தல்  ஆணைக்  குழு  உறுப்பினர் )    மற்றும்  எம் .இஸட்.அஹமட்  முனவ்வர்...