உதிர்ந்த பூவாய் இன்று நிஸ்பா தாத்தா
எமது ஊரின் மேற்குப் பக்கத்தில் (கொச்சிவத்தை) வாழ்ந்து வந்தவர். அவரைப் பற்றி விசாலமாய் எழுதுவதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. என்றாலும்...,
ஏதோ எழுதிவிட வேண்டுமென்றே என் மனம் உந்துகிறது.
அவருடன் சேர்ந்து ஒன்பது சகோதரர்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஊரில் தான் இருக்கிறார்கள்.
'சுகமில்லை' என கேள்விப்பட்டு ஓரிரு வாரங்களே.., நோயால் கஷ்டப்படாமல் அவரை அன்பானவன் அழைத்துக் கொண்டுவிட்டான்.
கணவனுக்கு சுகமில்லை என்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால் தன்னாலான முயற்சிகளை செய்து கணவனை காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வந்தவர்..
இன்று மீளாத் துயிலில்... கணவனின் மனது கனத்துப்போகாதா....?!
இறைவா...
நிஸ்பா தாத்தாவின் கணவனுக்கும் , சகோதரர்களுக்கும் , உற்றார் உறவினர்களுக்கும் பொறுமையை வழங்கி வைப்பாயாக...!!
நிஸ்பா தாத்தாவுக்கு ஜன்னதுல் பிர்தவ்ஸை பாக்கியமாக்கி வைப்பாயாக....!!
எமது ஊரில் இந்த முறை ரமழானின் இது முதல் மையித். இன்றைய தினம் இறைவனடி சேர்ந்துவிட்ட அவரை எமது துஆக்களில் சேர்த்துக் கொள்வோம். அல்லாஹும்மஃபிர்லஹா...
வர்ஹம்ஹா...
Comments
Post a Comment