"சத்தங்கள் பலவிதம்
அதில் நான் ஒரு விதம்"
என்று கூறிக்கொண்டிருந்தார்.
உடல் நலக்குறைவால் நேற்றைய தினம் மருந்தகம் சென்றிருந்தேன்.
தன் கவியால் பலரையும் மகிழ்வித்திக் கொண்டிருந்தார் அவர். உண்மையில் நல்ல மனிதர் நான் அறிந்த வகையில்...
கவி பாடுவதில் வல்லமை கொண்டவர். தமிழும் ஆங்கிலமும் அவருக்கு அத்துப்படி என்று கூறக் கேட்டிருக்கிறேன். கஹட்டோவிட்டாவின் மைந்தர் அவர். கவிதை பாடுவதில் அவருக்கு நிகர் அவரே தான். கொஞ்சம் மானசீகமாக உள நலக்குறைவால் அடிக்கடி பாதிக்கப்படுபவர். இருந்தாலும் நிறைந்த ஞாபக சக்தியும் , பரந்த அறிவும் கொண்டவர் என்பதை அவருடன் கதைத்தாலே விளங்கிக் கொள்ளலாம்.
"மகள்
இது ஒரு பகல்
உனக்கு கிடைக்கும் புகழ்"
அவர் அவ்விடம் கூறிய கவி.. இன்னும் நிறையச் சொன்னார்.
அவர் வாயின் வார்த்தைகள் அதிகமாக கவிதைகளாகவே வெளிவரும். அதில் அர்த்தமும் இருக்கும்....
வல்லவன் அல்லாஹ்.. அவருக்கு நிறைந்த ஆரோக்கியத்தை நல்குவானாக...!!
Fayasa Fasil
Pic : Google
Comments
Post a Comment