Posts

ஷைமா பயணப்பட்டு விட்டாள்...!!

Image
அதிகாலைச் செய்தியது அதிர்ச்சிக்குள்ளாக்கியது பெரும்பாலும் அதிகாலையில் வரும் தொலைபேசி அழைப்புக்கள் ஜனாஸா தகவல்களாகவே இருந்திருக்கின்றன.. இன்றைய தினமும் அப்படித்தான். சுமார் 4.30 மணியளவில் ஜனாஸா பற்றி அறியக் கிடைத்தது. அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியவில்லை. இதே போன்று ஒரு தினத்தில் தான், இதே குடும்பத்தில் பிறந்து , வளர்ந்த சஹ்லாவின் ஜனாஸா அறிவிப்புக் கிடைத்தது. அவள் வபாத்தாகி 4 வருடங்கள். இன்று அவள் தங்கையும் பயணப்படுகிறாள். சஹ்லாவை எனக்கு நன்கு பரீட்சயம்.. ஷைமா வை அவ்வளவாக பழக்கமில்லை.. சஹ்லா வின் வபாத்தின் பின் ஷைமா எங்கும் போக மாட்டாள்.. பாடசாலை , பள்ளிக்கூடம் என எல்லாவற்றையும் தவிர்த்து இருந்தாள். தாத்தா வின் நினைவுகளில் இருந்து அவளால் மீண்டு வர நீண்ட காலம் எடுத்தது. தாத்தாவுடன் பத்ரியாவுக்கு சென்றுகொண்டிருந்த ஷைமா , சஹ்லாவின் வபாத்தின் பின் நீண்ட கால இடைவெளியின் பின் அவளது மாற்றத்திற்காக பாலிகாவில் சேர்ந்து கல்வியை தொடரலானாள். இன்று அவளும் எல்லாவற்றையும் விட்டு பயணப்படுகிறாள். ஒற்றுமை என்னவெனில், இரு ஜனாஸாக்களும் .. இரவு சாப்பிட்டு உறங்கிய குழந்தைகள்.. நடுச்சாமத்தில் ச...

பேச்சை அழகாக்குவோம்

#பேச்சை_அழகாக்குவோம் மனிதனானவன் தனக்கு கிடைத்த பல அருட்கொடைகளை வைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கிறான். அதில் ஒன்று நாவு. அந்த நாவை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது புரியாதவர்களாக நாம் வாழ்கிறோம். பேசிவிட்டால் போதும் என்று சிந்திப்போமே தவிர அந்தப் பேச்சு எவ்வாறானதாக அமைய வேண்டும் என்பதை நோக்கத் தவறுகிறோம். பேசும்போது..., 1. அளவாக பேச வேண்டும். 2. அழகாக பேச வேண்டும். 3. ஆட்களைப் பொறுத்தே பேச வேண்டும். ஒரு மனிதன் தனக்கு அவசியமற்ற விடயங்களில் தலையிடாமல் இருப்பதே சிறந்தது. "..... இன்னும் மனிதர்களுக்கு அழகானதைச் சொல்லுங்கள்..." ( பகரா : 83 ) " கால் தவறி விழுவதை விட மனிதன் வாய் தவறி விழுவதே அதிகம் " ( பைஹகீ ) இதனால் தான் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டிய உறுப்பு நாவு என்றும் கூறப்படுகின்றது. எனவே சிறந்த முறையில் எம் நாவுகளைப் பாதுகாத்துக் கொள்வோமாக...!! Fayasa fasil - writer #speaking #kindtalk #tounge
Image
புதையுண்டு கிடந்த என் எழுத்துக்கள்  மீண்டெழ மன்றாடுகின்றன..!  ஒரு சிறிய இடைவேளை  எடுத்ததென்னமோ உண்மை தான்.  அதற்காக முற்றும் துறந்த துறவியாகலாமா...?!  எழுத்தும் வாசிப்பும்  என்னிரு கண்களல்லவா....!!

வேண்டும் வரங்கள்.....

Image
நினைத்த உடன் மழை  இரவு நேர மெல்லிசை  கள்ளமில்லா சிரிப்பு  பொய்யில்லா நட்பு  மீண்டும் ஒரு பள்ளிப் பருவம்  தோள் சாய தோழி  உதவி செய்ய தோழன்  தாய் மடி தூக்கம்  தூக்கத்தில் மரணம்  - Fys -
Image
நிறைய வடுக்கள்.... பல காயங்கள்....  சில ஒத்தடங்கள்...  இன்னும் சில கீறல்கள்...  மேடு பள்ளங்கள்...  குன்று குழிகள்... அனைத்தையும் கடந்து தானே ஆக வேண்டும்...?!  ஒரு வழிப் பாதையில் ;  திரும்ப முடியாத வழியில் ;  பயணிக்கத் தானே வேண்டும்...?!  எல்லாம் ஒரு நாள் முற்றுப் பெறத்தானே வேண்டும்...?!  எங்கோ ஒரு மூலையில் எம் ஆத்மா பறிக்கப்படத்தானே வேண்டும்...?!  அதனை யாராலும் மறக்க முடியாது. மறுக்கவும் முடியாது. வாழ்க்கையின் விதி அப்படியாகத் தான் எழுதப்பட்டுள்ளது.  நான் அருந்த முடியாமல் போன ஒரு அமிர்தம் அவர்.... அவர் முன்னே சென்றுவிட்டார். நாங்கள் பின்னாளில் செல்லத்தான் வேண்டுமென.... இன்றுடன் எனது வாப்பா இறைவன் பக்கமாய் பயணப்பட்டு 20 வருடங்கள் கடந்து விட்டன. இந்த 20 வருடங்களும் எனக்குள் தந்த அனுபவங்கள் பல.... இன்று ஒரு பக்குவப்பட்ட ஜீவனாய்...  என் எழுத்துக்கள் உங்கள் முன்னிலையில் விரியும்போது என் வாப்பாவை ஒரு கணம் நினைத்துப் பார்க்கிறேன். கண்ணால் காண முடியாவிட்டாலும் என் மனது தினம் குமுறிக் கொண்டுதான் இருக்கின்றது ;  வெடிக்காத எரிமலையாய்...
Image
கல்லுக்கும் முள்ளுக்கும் இடையில் அகப்பட்ட கவிதையாக நான்...!  என் கவிதை என்றும் பட்டை தீட்டப்பட்ட இரத்தினமாகவே ஜொலிக்கும்...!!  Fayasa fasil - writer

be a shadow

Image
*பிறர் மிதிக்க நினைக்கும்  புல்லல்ல நான்...!  பிறருக்கு நிழல் கொடுக்கப் பிறந்தவள் நான்...!* கிட்ஷனில் வார்த்த கவிதை இது..  பேனா... பேப்பர்...  எங்கே... ?!  பிறகு எழுதலாமோ... ?!  என யோசித்தேன்..  வேண்டவே வேண்டாம்...  பிறகு...,  மறதிக்குப் பிறந்தவள் என  எழுதி விடுவார்கள்...  நோட்பேட் இருக்க பயமேன்...  எழுதிட்டோம்ல....!!!  Fayasa Fasil  Pic : Google  #morngmotivation  #poem  #notpad  #writinglover  #beashadow